Sheikh Omar Sharif bin Abdul Salam

Ayah by Ayah

Tags

Download Links

Sheikh Omar Sharif bin Abdul Salam translation for Surah Muhammad — Ayah 15

47:15
مَّثَلُ ٱلۡجَنَّةِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۖ فِيهَآ أَنۡهَٰرٞ مِّن مَّآءٍ غَيۡرِ ءَاسِنٖ وَأَنۡهَٰرٞ مِّن لَّبَنٖ لَّمۡ يَتَغَيَّرۡ طَعۡمُهُۥ وَأَنۡهَٰرٞ مِّنۡ خَمۡرٖ لَّذَّةٖ لِّلشَّٰرِبِينَ وَأَنۡهَٰرٞ مِّنۡ عَسَلٖ مُّصَفّٗىۖ وَلَهُمۡ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَمَغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡۖ كَمَنۡ هُوَ خَٰلِدٞ فِي ٱلنَّارِ وَسُقُواْ مَآءً حَمِيمٗا فَقَطَّعَ أَمۡعَآءَهُمۡ ١٥
இறையச்சமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது துர்வாடை வீசாத (கெட்டுப் போகாத) தண்ணீர் ஆறுகளும், அதன் ருசி மாறாத பால் ஆறுகளும், அருந்துபவர்களுக்கு ருசியாக இருக்கும் மது ஆறுகளும் தூய்மையான தேன் ஆறுகளும் அ(ந்த சொர்க்கத்)தில் இருக்கும். இன்னும், அவர்களுக்கு எல்லாவகையான கனிகளும் அதில் கிடைக்கும். இன்னும், அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. இத்தகைய சொர்க்கவாசிகள், நரகத்தில் நிரந்தரமாக இருப்பவர்களை போன்று ஆகிவிடுவார்களா? (நரகத்தில் நுழைந்த) அவர்கள் கொதிக்கின்ற நீர் புகட்டப்படுவார்கள். ஆக, அது அவர்களின் குடல்களை துண்டு துண்டாக அறுத்து விடும்.