Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mujadila — Ayah 22

لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٢٢
தூதரே!- அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்ட மக்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்களுடன் நட்பு கொள்வதை நீர் காணமாட்டீர். அல்லாஹ்வுடன், அவனது தூதருடன் பகைமை பாராட்டும் இவர்கள் அவர்களின் தந்தையராக அல்லது பிள்ளைகளாக அல்லது சகோதரர்களாக அல்லது அவர்களின்பால் இணையும் அவர்களின் குடும்பத்தினராக இருந்தாலும் சரியே. ஏனெனில் ஈமான் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்களுடன் நட்பு கொள்வதைத் தடுக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் தொடர்பு அனைத்து வகையான தொடர்புகளையும் விட உயர்ந்தது. முரண்பாடு ஏற்படும் சமயங்களில் அதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்கள் -நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்- அவர்களுடன் நட்பு கொள்ளாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை நிலைக்கச்செய்துவிட்டான். எனவே அது மாற்றமடையாது. தனது ஆதாரம் மற்றும் பிரகாசத்தின் மூலம் அவன் அவர்களைப் பலப்படுத்தி விட்டான். மறுமை நாளில் அவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதன் இன்பம் அவர்களை விட்டும் என்றும் நீங்காது. அவர்களும் மரணிக்கமாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைந்தான். இதன் பிறகு அவன் ஒருபோதும் கோபப்பட மாட்டான். அவனைப் பார்ப்பது உட்பட முடிவடையாத இன்பத்தை அவர்களுக்கு அவன் வழங்கியதால் அவர்களும் அவனைக்கொண்டு திருப்தியடைவார்கள். மேற்கூறப்பட்ட பண்புகளைப் பெற்றவர்கள்தாம் அல்லாஹ் இட்ட கட்டளையைச் செயல்படுத்தும், அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கும் அவனுடைய அணியினர் ஆவர். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அணியினர்தாம் விரும்பியதைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.