Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Jumu'ah — Ayah 9

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٩
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! இமாம் மிம்பரில் ஏறிய பிறகு அதான் கூறுபவர் வெள்ளிக் கிழமை நாளில் (ஜுமுஆ) தொழுகைக்காக அழைத்தால் உரையிலும் தொழுகையிலும் கலந்துகொள்ள பள்ளியின்பால் விரையுங்கள். வழிபடுவதை விட்டும் உங்களை ஈடுபடுத்திவிடாமல் இருப்பதற்காக வியாபாரத்தை விட்டுவிடுங்கள். -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் இதனை அறிந்தவர்களாக இருந்தால் மேற்கூறப்பட்டவாறு ஜும்ஆ தொழுகைக்கு அதான் கூறப்பட்ட பிறகு வியாபாரத்தை விட்டுவிட்டு பள்ளிக்கு விரைவதே உங்களுக்குச் சிறந்ததாகும். எனவே அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையைச் செயல்படுத்துங்கள்.