Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tahrim — Ayah 4

إِن تَتُوبَآ إِلَى ٱللَّهِ فَقَدۡ صَغَتۡ قُلُوبُكُمَاۖ وَإِن تَظَٰهَرَا عَلَيۡهِ فَإِنَّ ٱللَّهَ هُوَ مَوۡلَىٰهُ وَجِبۡرِيلُ وَصَٰلِحُ ٱلۡمُؤۡمِنِينَۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَعۡدَ ذَٰلِكَ ظَهِيرٌ ٤
உங்கள் இருவர் மீதும் பாவமன்னிப்புக் கோருவது கடமையாகும். ஏனெனில், தன் அடிமைப் பெண்ணைப் பிரிந்து அவளை தன் மீது தடைசெய்துகொள்ளும் அல்லாஹ்வின் தூதர் வெறுக்கும் விடயத்தை உங்கள் இருவரின் உள்ளங்களும் விரும்பின. நீங்கள் இருவரும் மீண்டும் அவரைத் தூண்டிவிடுவதைத் தொடர்ந்தால் நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரின் நேசனும் உதவியாளனுமாவான். ஜிப்ரீலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையாளர்களும் அவரின் உதவியாளர்களாகவும் நேசர்களாகவும் இருக்கின்றனர். அது மாத்திரமின்றி வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாகவும் அவரை நோவினை செய்வோருக்கெதிராக உதவுவோராகவும் உள்ளனர்.