Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Saba — Ayah 12

وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهۡرٞ وَرَوَاحُهَا شَهۡرٞۖ وَأَسَلۡنَا لَهُۥ عَيۡنَ ٱلۡقِطۡرِۖ وَمِنَ ٱلۡجِنِّ مَن يَعۡمَلُ بَيۡنَ يَدَيۡهِ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَمَن يَزِغۡ مِنۡهُمۡ عَنۡ أَمۡرِنَا نُذِقۡهُ مِنۡ عَذَابِ ٱلسَّعِيرِ ١٢
தாவூதின் மகன் சுலைமானுக்கு நாம் காற்றை வசப்படுத்தித் கொடுத்தோம். அதனுடைய காலைப் பயணம் ஒரு மாதமாகவும் மாலைப் பயணம் ஒருமாதமாகவும் இருந்தது. அவர் செம்பிலிருந்து தாம் விரும்பியவற்றை செய்துகொள்வதற்காக அவருக்காக செம்பை ஊற்று போல் உருகி ஓடச் செய்தோம். தன் இறைவனின் கட்டளைப்படி அவரிடத்தில் வேலை செய்யக்கூடிய ஜின்களை நாம் அவருக்கு வசப்படுத்தித் கொடுத்தோம். நம் கட்டளையை நிறைவேற்றாத ஜின்களை நாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பால் வேதனை செய்வோம்.