Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Saba — Ayah 2

يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ ٢
பூமியில் உட்செல்லும் நீர், தாவரம் அதிலிருந்து வெளிப்படும் தாவரம், அது போன்றவற்றையும், வானத்திலிருந்து இறங்கும் மழை, வானவர்கள், வாழ்வாதாரம் போன்றவற்றையும் வானத்தின் நோக்கி ஏறுகின்ற வானவர்கள் அடியார்களின் செயல்கள், அவர்களின் ஆன்மாக்கள் போன்றவற்றையும் அல்லாஹ் அறிகிறான். அவன் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு மிகுந்த கருணையாளனாகவும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.